Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைந்து 25 ஆண்டுகளாகிவிட்டன- மோடி

Webdunia
வியாழன், 25 பிப்ரவரி 2021 (18:11 IST)
திமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது என்று பிரதமர் மோடி இன்று தமிழகத்தில் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த 1989ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 150 தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்தது. அதன் பின்னர் திமுக அதிமுக என மாறி மாறி ஆட்சி அமைத்தாலும், கூட்டணி கட்சிகளின் உதவியுடன் தான் திமுக ஆட்சி அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை இன்று பிரதமர் மோடி தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார்
 
திமுக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்து 25 ஆண்டுகள் ஆகி விட்டன என்றும் ஒட்டுமொத்த தமிழகத்துக்கான கட்சி என்ற தகுதியை திமுக இழந்து விட்டது என்றும் அவர் கூறினார்
 
பிராந்திய கட்சிகளுக்குள் ஒரு பிராந்திய கட்சியான திமுக இருக்கிறது என்றும் திமுக காங்கிரஸ் கூட்டணி பிரச்சினைகளால் நல்லாட்சியை தர முடியாது என்றும் அவர் தெரிவித்தார்
 
மேலும் ஜெயலலிதாவுக்கு தொல்லை கொடுத்தவருக்கு காங்கிரசும் திமுகவும் வெகுமதி கொடுத்ததாகவும் மோடி குற்றம்சாட்டினார். தேவேந்திர குல வேளாளர்களின் கோரிக்கையை ஏற்று செயல்படுத்தியது அதிமுகவும் மத்திய பாஜக அரசும் தான் என்றும் தேசிய ஜனநாயக கூட்டணி என்பது அனைத்து மாநிலங்களின் விருப்பங்களை கொண்ட கட்சி என்றும் அவர் தெரிவித்தார்

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments