Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக கூட்டணியில்....காங்கிரஸ் கட்சிக்கு 24 தொகுதிகள் ஒதுக்க முடிவு???

Webdunia
செவ்வாய், 2 மார்ச் 2021 (19:05 IST)
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 24 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள்  வெளியாகிறது.
 
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 2 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
 
இதனால் தமிழக அரசியல்களம் சூடுபிடித்துள்ளது.திராவிட கட்சிகள் மற்ற கட்சிகளுடன் கூட்டணி குறித்தும் தொகுதிப் பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில், தேர்தல் கால நடைமுறைகள் சமீபத்தில் அமலுக்கு வந்த நிலையில், தமிழக தேர்தல் களம் பரபரப்புடன் காட்சியளிக்கிறது. அனைத்து கட்சியினரும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்நிலையில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய முஸ்லீக் லீக் மற்றும் மனித நேய மக்கள் கட்சிகள் நேற்று 3 , 2 தொகுதிகள் பெற்ற நிலையில், இன்று காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
 
இப்பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சிக்கு 24 தொகுதிகளை ஒதுக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. அதேபோல் விரைவில் விசிக கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என தெரியவரும்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைன் சூதாட்ட வழக்கு.. 15 மாதங்களாக விசாரணைக்கு வராமல் தடுக்கும் சக்தி எது? ராமதாஸ்

சென்னைக்கு வருகிறது ரஷ்ய போர்க்கப்பல்.. கூட்டு பயிற்சி பெற திட்டம் என தகவல்..!

வாட்ஸ்ஆப் சாட் மூலம் வரி ஏய்ப்பை கண்டுபிடிக்கிறோம்: நிர்மலா சீதாராமன் தகவல்..!

வானிலை முன்னறிவிப்பிலும் இந்தி திணிப்பு.. சு வெங்கடேசன் எம்பி கண்டனம்..!

ஒரு கிலோ தக்காளி 3 ரூபாய் மட்டுமே.. பெட்டி பெட்டியாய் சாலையில் கொட்டிய விவசாயிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments