திமுக கூட்டணியில்....காங்கிரஸ் கட்சிக்கு 24 தொகுதிகள் ஒதுக்க முடிவு???

Webdunia
செவ்வாய், 2 மார்ச் 2021 (19:05 IST)
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 24 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள்  வெளியாகிறது.
 
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 2 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
 
இதனால் தமிழக அரசியல்களம் சூடுபிடித்துள்ளது.திராவிட கட்சிகள் மற்ற கட்சிகளுடன் கூட்டணி குறித்தும் தொகுதிப் பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில், தேர்தல் கால நடைமுறைகள் சமீபத்தில் அமலுக்கு வந்த நிலையில், தமிழக தேர்தல் களம் பரபரப்புடன் காட்சியளிக்கிறது. அனைத்து கட்சியினரும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்நிலையில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய முஸ்லீக் லீக் மற்றும் மனித நேய மக்கள் கட்சிகள் நேற்று 3 , 2 தொகுதிகள் பெற்ற நிலையில், இன்று காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
 
இப்பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சிக்கு 24 தொகுதிகளை ஒதுக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. அதேபோல் விரைவில் விசிக கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என தெரியவரும்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10 நாட்களுக்கு முன்பு வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்.. தேர்தல் ஆணையர்..!

பீகார் தேர்தல் தேதி அறிவிப்பு.. எத்தனை கட்டம்? தேர்தல் முடிவு தேதி உள்பட முழு விவரங்கள்..!

தவெக மீது சில தவறுகள் இருந்தாலும் விஜய்யை குற்றவாளியாக்க கூடாது: அண்ணாமலை பேட்டி..!

ரூ.249 ரீசார்ஜ் ப்ளானை நீக்கிய வோடபோன் ஐடியா.. அதுக்கு பதிலா? - பயனர்கள் அதிருப்தி!

காலாண்டு முடிந்து வந்த மத்திய கல்வி நிதி! மாணவர் சேர்க்கை அறிவித்த தமிழக அரசு!

அடுத்த கட்டுரையில்
Show comments