Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திமுக தலைவர் டூ முதல்வர்: ஆம் ஆத்மி வெற்றியால் தலைமை குஷி!

திமுக தலைவர் டூ முதல்வர்: ஆம் ஆத்மி வெற்றியால் தலைமை குஷி!
, செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (13:16 IST)
டெல்லியில் ஆம் ஆத்மி முன்னிலை வகித்து வருவதால் திமுக தலைமை மகிழ்ச்சியில் உள்ளதாக தெரிகிறது. 
 
டெல்லியில் கடந்த வாரம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 70 தொகுதிகளில் 58 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 12 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட முன்னிலை பெறவில்லை. 
 
இந்நிலையில் ஆம் ஆத்மியின் வெற்றியால் மகிழ்ச்சியில் உள்ளதாம் திமுக தரப்பு. ஏனெனில் இந்த தேர்தலுக்காக ஆம் ஆத்மி கட்சிக்காக வியூகங்களை வகுத்து கொடுத்தது திமுக தற்போது கைகோர்த்துள்ள பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம். 
 
இந்த வெற்றியை பிரஷாந்த் கிஷோர் தனது டிவிட்டர் பக்கத்தில் இந்தியாவின் ஆன்மாவை காப்பாற்றிய டெல்லி மக்களுக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார். அதேபோல திமுக தலைவர் ஸ்டாலினும் ஆம் ஆத்மிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 
 
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள தேர்தலுக்கு இப்போதே களப்பணிகளை ஐபேக் நிறுவனத்தின் மூலம் துவங்கியுள்ளது திமுக. எனவே அடுத்த முதல்வர் ஸ்டாலின் என திமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் சந்தோசப்பட்டு வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆட்சி பீடத்தில் துடைப்பத்தை வெச்சிட்டீங்களே! – பாஜக பிரமுகர் வேதனை!