Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழையும் மற்ற மாநில மொழிகளைக் காக்கவும் திமுக போராடும் ...! எம்.பி., கனிமொழி

Webdunia
சனி, 7 செப்டம்பர் 2019 (16:12 IST)
குரூப் - சி எனப்படும் துறைசார்ந்த ரயில்வே பொதுப்போட்டித் தேர்வை தமிழில் நடத்த தேவையில்லை என ரயில்வேதுறை அறிவித்திருந்தது. இந்நிலையில் ரயில்வே தேர்வில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டதற்கு தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், நேற்று  கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில், மத்திய ரயில்வே வாரியம் தமிழைப் புறக்கணிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து,  திமுக எம்.பி கனிமொழி தலைமையில்,  சென்னை தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் ,இன்று, திமுகவினர் போராட்டம் நடத்தினர்.
அப்போது  கனிமொழி கூறியதாவது :
ஆளும் மத்திய அரசு, ஒரு மொழியை அழித்துவிட்டால். அதன் இனத்தை அழித்துவிடாலாம் என்ற எண்ணத்தில் உள்ளது. அதனால் தமிழைப் புறக்கணிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ரயில்வே வாரியத்தின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன். போர்களத்தில் திமுகவினர் பின்வாங்கியவர்கள் அல்ல... அதனால் மற்ற மாநிலத்தின் மொழிகளைக் காக்கவும் திமுக., போராடி வருகிறது என தெரிவித்துள்ளார். இபோராட்டத்தின் போது, திமுக கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments