Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தங்கம் தென்னரசு நீதிமன்றத்தில் ஆஜர்

தங்கம் தென்னரசு நீதிமன்றத்தில் ஆஜர்

தங்கம் தென்னரசு நீதிமன்றத்தில் ஆஜர்
, வியாழன், 7 ஜூலை 2016 (02:06 IST)
திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு அருப்புக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
 

 
கடந்த மே மாதம் 12 ம் தேதி, விருதுநகர் மாவட்டம், திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நரிக்குடியில், தேர்தல் பிரச்சாரத்திற்கு முறையான அனுமதி பெறாமலும், தேர்தல் விதிமுறைகளுக்கு மீறி அதிகமான வாகனங்களை பயன்படுத்தியதாலும், முன்னாள் தி.மு.க. அமைச்சர் தங்கம் தென்னரசு மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.
 
இந்த வழக்கு அருப்புக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சொர்ணகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தங்கம் தென்னரசு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இதனையடுத்து, இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாயில்லா ஜீவனை வதைத்த எம்பிபிஎஸ் மாணவர்கள் சஸ்பெண்ட்