Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாயில்லா ஜீவனை வதைத்த எம்பிபிஎஸ் மாணவர்கள் சஸ்பெண்ட்

வாயில்லா ஜீவனை வதைத்த எம்பிபிஎஸ் மாணவர்கள் சஸ்பெண்ட்

வாயில்லா ஜீவனை வதைத்த எம்பிபிஎஸ் மாணவர்கள் சஸ்பெண்ட்
, வியாழன், 7 ஜூலை 2016 (01:36 IST)
வாயில்லா ஜீவன் என அழைக்கப்படும் நாயை கொடூரமாக வதைத்த எம்பிபிஎஸ் மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
 
நாகர்கோவிலைச் சேர்ந்த கவுதம் சுதர்சன், நெல்லையைச் சேர்ந்த ஆஷிஷ் பால் இருவரும் சென்னை சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் கீழ்க்கட்டளை பகுதியில் தங்கியுள்ளனர்.
 
இந்த நிலையில் இவர்கள் ஒரு நாயை 4 வது மாடியிலிருந்து தூக்கி வீசியுள்ளனர். மேலும், இந்த காட்சியை வீடியோ பதிவு செய்து பேஸ்புக் மற்றம் வாட்ஸ் அப்களில் கடந்த சில நாட்களாக உலா வந்தது.
 
இந்த வீடியோவை பார்த்த விலங்குகள் நல ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்து, காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் இருவரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும், அவர்கள் இருவரையும் மருத்துவ சஸ்பெண்ட் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராம்குமார் உடல் நிலை பற்றி திடீர் வதந்தி