திமுக நிர்வாகிகள் கட்சியிலிருந்து திடீர் நீக்கம்! – துரைமுருகன் அதிரடி!

Webdunia
புதன், 16 பிப்ரவரி 2022 (08:48 IST)
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக போட்டியிட்ட திமுகவினர் உள்பட 19 பேரை திமுக கட்சியிலிருந்து நீக்கியுள்ளது.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியான நிலையில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது.

அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளில் பலர் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விருப்ப மனு அளித்திருந்த நிலையில் சிலர் தேர்ந்தெடுக்கப்படாததால் பல பகுதிகளில் சுயேட்சையாகவும் சொந்த கட்சி வேட்பாளரை எதிர்த்து போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் கட்சியில் இருந்து கொண்டே சொந்த கட்சி வேட்பாளருக்கு எதிராக போட்டியிடுபவர், கட்சி வேட்பாளர் மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் உள்ளிட்ட 19 பேரை திமுகவிலிருந்து நீக்குவதாக திமுக பொது செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காட்டுப்பாதையில் அமெரிக்காவுக்கு நுழைய முயன்ற 50 இந்தியர்கள்.. கைவிலங்கிட்டு நாடு கடத்தல்..!

வரும் தேர்தலில் திமுக வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது. முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்..!

சாலையின் நடுவே சாக்கு மூட்டையில் கட்டுக்கட்டாக பணம்.. மதுரையில் பரபரப்பு..!

5 பேருந்துகள்.. 150 பேர் சென்னை வருகை.. கரூரில் பாதிக்கப்பட்டவரகளின் குடும்பத்தை சந்தித்த விஜய்..!

மழையில் நனைந்த அரிசி மூட்டைகளில் நெல் முளைத்து விட்டது! இதுதான் திமுகவின் சாதனையா? - அன்புமணி ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments