காந்திய வழியில் போராட்டம் நடத்துவோம் – மு.க.ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றம்!

Webdunia
திங்கள், 17 பிப்ரவரி 2020 (19:21 IST)
தேசிய மக்கள் பதிவேட்டிற்கு எதிராக காந்தி பாணியில் அகிம்சை வழியில் போராட இருப்பதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய மக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு ஆரம்பம் முதலே திமுக மற்றும் அதன் கூட்டணிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தமிழகத்தில் கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது திமுக மற்றும் கூட்டணி கட்சிகள். அதை வெற்றிகரமாக முடித்து குடியரசு தலைவருக்கு அனுப்ப உள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் என்பிஆர் எனப்படும் தேசிய மக்கள் பதிவேட்டை எதிர்த்து காந்திய வழியில் ஒத்துழையாமை இயக்கம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. தமிழக அரசு மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு..

தீபத்திருநாள் வாழ்த்து கூறிய போஸ்டை திடீரென நீக்கிய செங்கோட்டையன்.. மீண்டும் பதிவு செய்ததால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments