Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏ.ஆர். முருகதாஸுக்கு நீதிமன்றம் கண்டனம் !

ஏ.ஆர். முருகதாஸுக்கு நீதிமன்றம் கண்டனம் !
, திங்கள், 17 பிப்ரவரி 2020 (17:52 IST)
ஏ.ஆர். முருகதாஸுக்கு நீதிமன்றம் கண்டனம்

தர்பார் பட நஷ்ட விவகாரம் தொடர்பாக மனுவை வாபஸ் பெறுவதாக முருகதாஸ் தரப்பு கூறியதை அடுத்து வழக்கு முடித்து வைத்தது உயர் நீதிமன்றம்.
 
தர்பார் பட நஷ்ட விவகாரம் தொடர்பாக விநியோகஸ்தர்கள், மிரட்டல் விடுப்பதாக  இயக்க்குநர் முருகதாஸ் கொடுத்த புகாரின் பேரில் 15 பேர் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்திருந்த நிலையில், பாதுகாப்பு கேட்டு தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெறுவதாக உயர் நீதிமன்றத்தில் முருகதாஸ் தெரிவித்தார்.
 
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது; மிரட்டல் விடுக்க மாட்டோம் என விநியோகஸ்தர்கள் தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டதால் வழக்கை வாபஸ் பெறுவதாக ஏ.ஆர்.முருகதாஸ் தர்ப்பீல் பதில் அளித்துள்ளார்.
 
இதற்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது, அதில், நீங்கள் விருப்பப்படும் வகையில் நீதிமன்றம் செயல்பட வேண்டுமா என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
 
மேலும், விருப்பப்பட்டால் பாதுகாப்பு கேட்பீர்கள்  வேண்டாம் என்று நினைத்தால் வாபஸ் பெறுவீர்களா ? நீங்கள் விருப்பப்படும் வகையில் நீதிமன்றம் செயல்பட வேண்டுமா? என நீதிமன்றம் கண்டம் தெரிவித்துள்ளது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தீ விபத்திலிருந்து மனைவியை மீட்ட கணவன்: தீயில் கருகி பலி!