Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலாவை விட பத்து மடங்கு ஊழல்வாதி கருணாநிதி: சுப்பிரமணியன் சுவாமி கடும் தாக்கு!

சசிகலாவை விட பத்து மடங்கு ஊழல்வாதி கருணாநிதி: சுப்பிரமணியன் சுவாமி கடும் தாக்கு!

Webdunia
வெள்ளி, 17 நவம்பர் 2017 (11:57 IST)
தமிழகத்தில் வருமான வரித்துறையினர் சசிகலா குடும்பத்தை குறிவைத்து மெகா ரெய்டை நடத்தியுள்ளனர். இந்நிலையில் சசிகலாவை விட மிகப்பெரிய ஊழல்வாதி கருணாநிதி என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.


 
 
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் பாஜக சசிகலாவுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுத்தாலும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஆரம்பம் முதலே சசிகலா ஆதரவு நிலைப்பாடிலேயே உள்ளார். பல சந்தர்ப்பங்களில் அவர் அதை வெளிக்காட்டியுள்ளார். இரட்டை இலை தொடர்பாக, கட்சியின் அடுத்த தலைமை குறித்த கேள்வி எழும்போது என பல நேரங்களில் சசிகலாவுக்கு ஆதரவாகவே சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்து வந்திருக்கிறார்.
 
இந்நிலையில் சசிகலா குடும்பத்தை குறிவைத்து வருமான வரித்துறை சோதனை நடத்தியதையும் சில நாட்களுக்கு முன்னர் , ஒரு சார்பாக சோதனை நடத்தக்கூடாது என விமர்சித்திருந்தார் சுப்பிரமணியன் சுவாமி. இதனையடுத்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த சுப்பிரமணியன் சுவாமி இந்த ரெய்டு குறித்து பேசினார்.
 
சசிகலாவை விட பத்து மடங்கு ஊழல் செய்தவர் திமுக தலைவர் கருணாநிதி. சசிகலா மீது ரெய்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும்போது ஏன் கருணாநிதி மற்றும் ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கேள்வி எழுப்பிய சுப்பிரமணியன் சுவாமி இந்த ரெய்டு நடவடிக்கையின் பின்னணியில் எந்த அரசியலும் இல்லை என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments