Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி அசைன்மெண்ட்: ஆளுநரின் அடுத்த விசிட் கன்னியாகுமரி!

டெல்லி அசைன்மெண்ட்: ஆளுநரின் அடுத்த விசிட் கன்னியாகுமரி!

Webdunia
வெள்ளி, 17 நவம்பர் 2017 (11:25 IST)
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஆய்வு நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரது அடுத்த விசிட் கன்னியாகுமரி மாவட்டத்தில் தான் என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்.


 
 
ஆளுநரின் இந்த ஆய்வு ஏற்கனவே டெல்லியில் இருந்து திட்டமிட்டு கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆளுநர் எங்கெல்லாம் ஆய்வு நடத்த வேண்டும் என்பது முன்கூட்டியே டெல்லியில் இருந்து ப்ளான் போட்டுக் கொடுத்துவிட்டார்களாம்.
 
அந்த லிஸ்டில் பிஜேபிக்குச் செல்வாக்கான மாவட்டமாக கருதப்படும் கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில்தான் முதலில் இருக்கிறதாம். இந்த மாவட்டங்களில் முதலில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஆளுநருக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறதாம்.
 
ஆளுநருக்கு டெல்லி கொடுத்த அசைன்மெண்ட்படி கோவை ஆய்வுக்கு பின்னர் அவரது அடுத்த விசிட் கன்னியாகுமரி மாவட்டத்தில்தான் இருக்கும் என உறுதியாக சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தாலும் அதிகாரங்களை ஆளுநரிடம் கொடுத்து ஆட்டிவைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments