Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணவன் மனைவியாக குடும்பம் நடத்துகிறோம்: திருநாவுக்கரசர் கலகல!

Webdunia
ஞாயிறு, 11 பிப்ரவரி 2018 (11:10 IST)
காங்கிரஸ் மற்றும் திமுக கணவன் மனைவி போல் இணைந்து செயல்படுவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். 
 
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு, காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்றது முதல் கட்சி வேகமாக வெற்றி படிக்கட்டுகளில் ஏற தொடங்கிவிட்டது. 
 
ராஜஸ்தானில் நடைபெற்ற சட்டசபை மற்றும் நாடாளுமன்ற இடைத்தேர்தல்களில் தோல்வியடைந்தது பாஜகவையும் மோடியையும் பாதித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் வெற்றி மோடிக்கு பயத்தையும் பீதியையும் ஏற்படுத்தியிருக்கிறது. 
 
மேலும், காங்கிரஸ் திமுகவும் கூட்டணியில் இணைந்து செயல்படுவதாகவும், காங்கிரஸும் திமுகவும் திருமணமாகி கணவன் மனைவியாக குடும்பம் நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments