சட்டமன்றத்தில் விட்ட கோவையை உள்ளாட்சியில் பிடித்த திமுக! – வெற்றி நிலவரம்!

Webdunia
செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (11:09 IST)
நகர்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் கோவையில் திமுக கூட்டணி வெற்றி பெற்று வருகிறது.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இன்று உள்ளாட்சி தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் பல பகுதிகளில் திமுக முன்னிலையில் உள்ளது.

கோவை மாநகராட்சியில் இதுவரை 8 இடங்களுக்கான முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அதில் 5 இடங்களில் திமுக, 2 இடங்களில் காங்கிரஸ், ஒரு இடத்தில் சிபிஎம் கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை தொகுதிகளில் திமுக வெற்றி பெறாத நிலையில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 20ல் புதிய கட்சியை தொடங்குகிறார் மல்லை சத்யா.. திராவிடத்தில் இன்னொரு கட்சியா?

மேல்மருவத்தூரில் 57 விரைவு ரயில்கள் தற்காலிக நிறுத்தம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

ஷேக் ஹசீனா குற்றவாளி.. அதிகபட்ச தண்டனை வழங்கப்படும்: வங்கதேச நீதிமன்றம் தீர்ப்பு..!

பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் ராஜினாமா.. மீண்டும் பதவியேற்பது எப்போது?

6 மாதமாக டிஜிட்டல் அரெஸ்டில் இருந்து பெண் மென்பொருள் பொறியாளர்.. ரூ.32 கோடி இழப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments