Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி: வதந்திகளை நம்ப வேண்டாம் என தேமுதிக அறிவிப்பு

விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி: வதந்திகளை நம்ப வேண்டாம் என தேமுதிக அறிவிப்பு
, வெள்ளி, 31 ஆகஸ்ட் 2018 (22:09 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சற்றுமுன்னர் போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு வதந்திகள் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில் தேமுதிக சற்றுமுன் இதுகுறித்து விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், 'தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நலமுடன் இருக்கிறார். வதந்திகளை நம்ப வேண்டாம்' என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தேமுதிக தொண்டர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் டயாலிசிஸ் சிகிச்சைக்காக போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்கள் கூறுகின்றன.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வணக்கமே மரியாதையானது காலில் விழுவது அல்ல: நெகிழ வைக்கும் ஸ்டாலின்