Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளிக்கு அரசு சிறப்பு பேருந்துகளின் முன்பதிவு.. ஒரு மணி நேரத்தில் டிக்கெட் காலி..!

Siva
வியாழன், 5 செப்டம்பர் 2024 (14:56 IST)
தீபாவளி தினத்தில் சொந்த ஊர் செல்ல அரசு சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு தொடங்கிய நிலையில் ஒரு மணி நேரத்தில் அனைத்து பேருந்துகளுக்குமான டிக்கெட் காலி ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. 
 
அரசு விரைவு பேருந்துகளில் 60 நாட்களுக்கு முன் முன்பதிவு செய்யும் வசதி இருக்கும் நிலையில் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை என்பதால் தற்போது முன்பதிவு தொடங்கியுள்ளது.
 
இந்த நிலையில் அக்டோபர் 28, 29 ஆகிய தேதிகளில் பயணம் செய்வதற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் ஒரு மணி நேரத்தில் நிரம்பி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 1500 பேருந்துகளுக்கு முதல் கட்டமாக முன்பதிவு நடந்து வருவதாகவும் இது தவிர வழக்கம் போல் சிறப்பு பேருந்துகளும் அறிவிக்கப்படும் என்றும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
 
அதேபோல் நவம்பர் மூன்றாம் தேதி தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காகவும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் இதற்கான டிக்கெட் வரும் விரைவாக நிரம்பி வருகிறது என்றும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments