எம்.எல்.ஏக்களின் பதவியை காலி செய்வதுதான் தினகரனின் நோக்கம் - திவாகரன் பேட்டி

Webdunia
வெள்ளி, 15 ஜூன் 2018 (16:51 IST)
18 எம்.எல்.ஏக்களின் பதவி பறி போக வேண்டும் என்பதுதான் தினகரனின் நோக்கம் என சசிகலாவின் சகோதரர் பேட்டியளித்துள்ளார்.

 
பெரிது எதிர்பார்க்கபப்ட்ட 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லும் என தீர்ப்பு வழங்கினார். ஆனால், நீதிபதி சுந்தர் வழங்கிய தீர்ப்பில், சபாநாயகரின் உத்தரவு செல்லாது என தீர்ப்பு வழங்கினார்.    இதனால், 3வதாக ஒரு நீதிபதி நியமிக்கப்பட்டு அவர் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த திவாகரன் “18 எம்.எல்.ஏக்களின் பதவி பறி போக வேண்டும் என்பதுதான் தினகரன் நோக்கம். ஆனால் தீர்ப்பு வேறு மாதிரி வந்து விட்டது. இந்த தீர்ப்பு தினகரனுக்கு கிடைத்த சம்மட்டி அடி. 3வது நீதிபதியின் தீர்ப்பு வெளியான பின் இந்த வழக்கு முடிவிற்கு வரும்” என அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணி கணக்கு போடும் பிரேமலதா!.. பழனிச்சாமி முயற்சி பலிக்குமா?!.. பின்னணி என்ன?..

விஜய் பக்கம் வந்த முதல் கட்சி!.. தவெகவுடன் கூட்டணி அமைக்கும் என்.ஆர்.காங்கிரஸ்!..

2026 சட்டமன்ற தேர்தலுக்கு வேட்பு மனு!.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட திமுக..

கூட்டணி பேச்சுவார்த்தை ஸ்டார்ட்!.. முதல் சீட் அந்த கட்சிக்குதான்!.. திமுக முடிவு!...

திமுக ஆட்சிக்கு வருவது உறுதி!. ஆனா இத பண்ணுங்க!.. சட்டசபையில் பேசிய செல்வபெருந்தகை!..

அடுத்த கட்டுரையில்
Show comments