Webdunia - Bharat's app for daily news and videos

Install App

18 எம்.எல்.ஏ.க்களின் அறைகளுக்கு சீல்: சபாநாயகர் அதிரடி உத்தரவு

Webdunia
செவ்வாய், 30 அக்டோபர் 2018 (08:46 IST)
சமீபத்தில் நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏகளின் விடுதி அறைகளுக்கும் சீல் வைக்க சபாநாயகர் உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், செந்தில் பாலாஜி உள்ளிட்ட 18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என சமீபத்தில் 3வது நீதிபதி சத்தியநாராயணன் தீர்ப்பளித்தார். இதனையடுத்து 18 தொகுதிகளும் காலி என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஒருசில எம்.எல்.ஏக்கள் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சட்டப்பேரவை விடுதிக்குள் சென்று வருவதாக கூறப்பட்டது. இதனையடுத்து சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சட்டப்பேரவை விடுதியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களின் அறைகளையும் பூட்டி சீல் வைக்க சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதனையடுத்து 18 அறைகளும் பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

பூட்டி சீல் வைக்கப்பட்ட இந்த 18 அறைகளும் சட்டப்பேரவை செயலகம் வசம் எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும், இந்த அறைகளை அனுமதியின்று யாரும் திறக்க கூடாது என்றும் விடுதி அறைகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments