Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்சியின் வளர்ச்சி குறித்து பேசினோம்.. ராமதாஸ் சந்திப்புக்கு பின் அன்புமணி பேட்டி..!

Mahendran
ஞாயிறு, 29 டிசம்பர் 2024 (14:40 IST)
புதுச்சேரியில் பாமக நிகழ்ச்சி நடந்த போது, டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 
 
ராமதாஸ், “நான் சொல்வதை தான் கேட்க வேண்டும், யாராக இருந்தாலும் நான் சொல்வதை கேட்கவில்லை என்றால் கட்சியில் இருக்க முடியாது,” என்று கூறியதை அடுத்து அன்புமணி பனையூரில் தனியாக அலுவலகம் தொடங்கியதாகவும், “தன்னை அங்கு வந்து சந்திக்கலாம்” என்று கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்நிலையில், ராமதாஸ், அன்புமணி ஆகிய இருவரும் இன்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் அன்புமணி, “கட்சியின் வளர்ச்சி குறித்து பேசினோம். 
 
2026 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் குறித்து ஆலோசனை செய்தோம். எங்கள் கட்சி ஜனநாயக அடிப்படையில் செயல்படும் கட்சி. ஜனநாயக கட்சிகளில் காரசாரமான விவாதங்கள் சகஜம். எங்கள் சொந்த பிரச்சனைகளை நாங்களே தீர்த்துக் கொள்வோம்,” என்று கூறினார்.
 
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மொபைல் போன் ஆர்டர் செய்தவருக்கு சென்ட் பாட்டில் அனுப்பிய அமேசான்.. காவல்துறையில் புகார்..!

ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தால் படிப்பை இழந்தேன்! - நடிகர் விஜயக்குமார் வேதனை!

ஏற்ற இறக்கத்தில் இருந்து வரும் தங்கம் விலை.. சென்னையில் இன்றைய நிலவரம் என்ன?

17வது மாடியில் இருந்து நாயை தூக்கி வீசி கொலை செய்த காவலாளி.. அதிர்ச்சி சம்பவம்..!

ISI உளவாளிக்கு ரகசியங்களை விற்ற இன்னொரு கருப்பு ஆடு கைது.. இந்திய கடற்படையை சேர்ந்தவரா?

அடுத்த கட்டுரையில்
Show comments