அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன்: ஷங்கர்

Mahendran
வெள்ளி, 21 பிப்ரவரி 2025 (17:12 IST)
இயக்குனர் ஷங்கருக்கு சொந்தமான 10 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியதாக கூறப்படும் நிலையில், அதை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததாக இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

"எந்திரன்" படம் தொடர்பான ஆதாரமற்ற குற்றச்சாட்டு ஏற்கனவே நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து, தீர்ப்பும் அளிக்கப்பட்டது. ஆரூர் தமிழ்நாடன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆனால், நீதிமன்ற தீர்ப்பை நம்பாமல் வெறும் புகார் அடிப்படையில் எனது சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். இது அப்பட்டமான துஷ்பிரயோகத்தை குறிப்பதாக கூறலாம் என்று ஷங்கர் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், ‘அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்களது நடவடிக்கையை மறுபரிசீலனை செய்வார்கள் என எதிர்பார்க்கிறேன். ஒருவேளை மறுபரிசீலனை செய்யவில்லை என்றால், அமலாக்கத்துறை உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன்," என ஷங்கர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, "எந்திரன்" படம் தொடர்பான வழக்கு விசாரணை நடந்த நிலையில், அந்த மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இது குறித்த புகாரை விசாரிக்கும் போது தான், அமலாக்கத்துறை ஷங்கர் சொத்துக்களை முடக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு.. இன்று 10 மாவட்டங்கள், நாளை 11 மாவட்டங்களில் கனமழை..!

AIIMS-உம் வராது, Metro Railஐயும் வரவிட மாட்டோம்.. மதுரையை வஞ்சிக்கும் பாஜக: முதல்வர் முக ஸ்டாலின்

சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் மின்சார பேருந்து: சேவை தொடங்குவது எப்போது?

ஊடுருவல்காரர்களை பாதுகாக்கவே SIR பணியை எதிர்க்கின்றனர். அமித்ஷா குற்றச்சாட்டு

மிஸ் யுனிவர்ஸ் 2025: மெக்சிகோவின் ஃபாத்திமா போஷ் வெற்றி

அடுத்த கட்டுரையில்
Show comments