Publish Date: Sun, 26 Sep 2021 (16:18 IST)
Updated Date: Sun, 26 Sep 2021 (16:21 IST)
இன்று தமிழகம் முழுவதும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வரும் நிலையில் திண்டுகலில் பரிசுகள் வழங்கப்படுவது வைரலாகியுள்ளது.
கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போடுவதை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ள கடந்த மூன்று வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் பிரம்மாண்ட தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதுபோல இன்று நடத்தப்பட்டு வரும் தடுப்பூசி முகாமில் இதுவரை 13 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
இந்நிலையில் பல ஊர்களில் தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் தடுப்பூசி போடுதலை ஊக்குவிக்க பரிசுகளும் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் திண்டுக்கல்லில் நடைபெறும் தடுப்பூசி முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் ரூ 200க்கு சிறப்பு கூப்பன், மேலும் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை குழுக்கள் முறையில் தங்க காசு, வெள்ளிக்காசு, பட்டுப்புடவை செல்போன் பரிசு வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.