Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் பதவியை எடப்பாடி பழனிச்சாமி இழக்க நேரிடும்: தினகரன் மிரட்டல்!

முதல்வர் பதவியை எடப்பாடி பழனிச்சாமி இழக்க நேரிடும்: தினகரன் மிரட்டல்!

Webdunia
வியாழன், 10 ஆகஸ்ட் 2017 (15:11 IST)
அதிமுக துணைப் பொதுச்செயலாளரக தினகரனை நியமித்தது செல்லாது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று நடந்த கூட்டத்தில் அதிரடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையடுத்து அதிமுக அணிகளுக்கு இடையே பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.


 
 
தினகரனுக்கும், எடப்பாடி பழனிச்சாமி அணிக்கும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில்,  எடப்பாடி பழனிச்சாமி அணியின் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
 
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் தினகரனை மீண்டும் கட்சியில் சேர்த்து அவரை துணைப் பொதுச்செயலாளராக நியமித்தது சட்ட விரோதம் என தீர்மானம் நிறைவேற்றினர்.
 
மேலும், தினகரன் அறிவித்த அறிவித்த நியமண பட்டியல் கட்சியின் விதிப்படி செல்லாது. அதை தொண்டர்கள் நிராகரிக்க வேண்டும். ஜெயலலிதா அளித்த கடிதத்தில் தினகரன் பெயர் இல்லை எனக்கூறி தேர்தல் ஆணையம் ஏற்கனவே நிராகரித்தது. 5 ஆண்டுகள் உறுப்பினராக இல்லாததால், தினகரனால் துணைப் பொதுச்செயலாளாரக நீடிக்க முடியாது.
 
ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளே தற்போது கட்சி மற்றும் ஆட்சியே வழி நடத்துகிறார்கள் என அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தில் எடப்பாடி பழனிச்சாமி, ஜெயக்குமார் உள்ளிட்ட 27 பேர் கையெழுத்து  இட்டுள்ளனர். அதே சமயம், சசிகலாவால் நியமிக்கப்பட்ட செங்கோட்டையன் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் மட்டும் இந்த தீர்மானத்தில் கையெழுத்திடவில்லை.
 
இந்நிலையில் இன்று தஞ்சாவூரில் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் சசிகலா கூறியதால் முதல்வரானவர் எடப்பாடி பழனிச்சாமி. தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தால் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவை பதவியை இழக்க நேரிடும் என மிரட்டல் விடுத்துள்ளார்.
 
கட்சி விரோத செயலில் எடப்பாடி பழனிச்சாமி ஈடுபட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நான் செயல்பட தடையில்லை. சட்டப்படி தான் துணைப் பொதுச்செயலாளராக நான் நியமிக்கப்பட்டேன். நியமன பதவிகளை வழங்க பொதுச்செயலாளருக்கு அதிகாரம் உள்ளது. மாநிலம் முழுவதும் நான் சுற்றுப்பயணம் செல்ல ஆரம்பித்துள்ளதால் அவர்கள் பயத்தில் உள்ளனர் என தினகரன் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments