Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தினகரன் மீதான தீர்மானம் கபோதிகளின் அறிவிப்பு - நாஞ்சில் சம்பத் காட்டம்

தினகரன் மீதான தீர்மானம் கபோதிகளின் அறிவிப்பு - நாஞ்சில் சம்பத் காட்டம்
, வியாழன், 10 ஆகஸ்ட் 2017 (14:19 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி அணி சார்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எந்த வகையிலும் தினகரனை கட்டுப்படுத்தாது என தினகரனின் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.


 

 
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று கூடிய கூட்டத்தில், துணை பொதுச் செயலாளராக தினகரனை நியமித்தது சட்டவிரோதம் எனவும், அவர் புதிதாக நியமித்த நியமனங்கள் எதுவும் செல்லாது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது, தினகரன் ஆதரவாளர்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்த நாஞ்சில் சம்பத் “இது காற்றோடு கத்திச்சண்டை போடும் கபோதிகளின் அறிவிப்பு. எந்த வகையிலும் இது தினகரனை கட்டுப்படுத்தாது. அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை அவர்கள் செய்து முடித்துள்ளார்கள். முக்கிய நிர்வாகிகள் இல்லாமல் இந்த தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளார்கள். 
 
பதவி ஆசை எடப்பாடி பழனிச்சாமியின் கண்ணை மறைக்கிறது. தினகரனை மையப்படுத்தியே அரசியலுக்கு வந்த அவர் தற்போது அவரை ஒதுக்க நினைக்கிறார். இவர்களுக்கு தொண்டர்களின் ஆதரவு கிடையாது. வருகிற 14ம் தேதி மேலூர் பொதுக்கூட்டத்தில் இதற்கான பதில் இருக்கும்” எனக் கூறியுள்ளார்.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளம்பெண்ணை படுக்கைக்கு அழைத்த இயக்குனர் - போலீசாரிடம் புகார்