Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எடப்பாடி அணியுடன் இணைந்தது தினகரன் அணி: இப்படியும் நடக்கலாம்!

எடப்பாடி அணியுடன் இணைந்தது தினகரன் அணி: இப்படியும் நடக்கலாம்!

எடப்பாடி அணியுடன் இணைந்தது தினகரன் அணி: இப்படியும் நடக்கலாம்!
, வெள்ளி, 1 செப்டம்பர் 2017 (13:08 IST)
நீண்ட திரைமறைவு பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் ஓபிஎஸ் அணி கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி இணைந்தது. அதன் பின்னர் தினகரன் அணி இவர்கள் இருவருக்கும் எதிராக விஸ்வரூபம் எடுத்துள்ளது.


 
 
ஆனால் அரசியலில் நிரந்தர நண்பனும் கிடையாது எதிரியும் கிடையாது என்பது போல எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் ஓபிஎஸ் அணி இணைந்தது போல தினகரன் அணி இணையும் செய்தியும் வரும். அதற்கான பணிகள் நடந்து வருவதாக தகவல்கள் வருகின்றன.
 
தினகரன் தரப்பு ஆட்சியை கலைக்க முயல்வதால் மத்தியில் உள்ள பாஜக தினகரனை சமாதானப்படுத்த முயற்சிகளை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன்னர் தினகரனின் தீவிர விசுவாசியான புகழேந்தி டெல்லி சென்றுள்ளார். அப்போது பாஜகவை சேர்ந்த சிலர் அவரிடம் பேசியிருக்கிறார்கள்.
 
அப்போது பேசிய அவர்கள், ஆட்சியை கலைக்கிறோம் என எந்த குழப்பத்தையும் ஏற்படுத்த வேண்டாம். அவரை கொஞ்ச நாள் அமைதியாக இருக்கச் சொல்லுங்க. கொஞ்ச நாள் கழித்து தினகரனையும் அவங்களோடு சேர்த்து வைக்க நாங்க ஏற்பாடு செய்யுறோம் என கூறியதாக தகவல்கள் வருகிறது.
 
அதே நேரத்தில் தினகரன் தேவையில்லாமல் ஆட்சியை கலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் அவருக்கு எதிராக நாங்களும் சில வேலைகளை செய்ய வேண்டி இருக்கும் எனவும் புகழேந்தியிடம் கூறியதாக கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தில் தற்போது ஆட்சியை கலைப்பதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்பதை தினகரனிடம் சொல்லவும் அறிவுறுத்தியுள்ளனர்.
 
இதற்கு தினகரன் தரப்பு பெரிய அளவில் எதிர்ப்பு இல்லாமல், தற்போது உடனடியாக பின்வாங்க முடியாது என சாதகமான பதிலேயே கூறியுள்ளது. இதனால் போகப்போக பாஜக வலையில் தினகரனும் வீழ்ந்து அதிமுக அணிகள் இணைப்பு மீண்டும் நடக்கலாம் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆர்எஸ்எஸ் பிடியில் ஆளுநர் வித்தியாசாகர் ராவ்: பரபரப்பு அறிக்கை!