Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்ன இருந்தாலும் மோடி இந்தியாவின் பிரதமர், அவருக்கு கருப்புக்கொடி காட்டக்கூடாது: டிடிவி தினகரன்

Webdunia
வியாழன், 12 ஏப்ரல் 2018 (09:21 IST)
இன்று தமிழகத்திற்கு வருகை தரும் பாரத பிரதமர் நரேந்திரமோடிக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தை திமுக உள்ளிட்ட கட்சிகள் நடத்தி வருகின்றன. பெரும்பாலான வீடுகளில் இன்று கருப்புக்கொடி ஏற்றி பிரதமருக்கு தங்கள் எதிர்ப்பை தமிழக மக்கள் காட்டி வருகின்றனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க காலந்தாழ்த்தும் மத்திய அரசுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கவே இந்த கருப்புக்கொடி என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.
 
இந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன், இந்த கருப்புக்கொடி போராட்டத்தில் தங்கள் கட்சியினர் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார். என்னதான் இருந்தாலும் மோடி இந்தியாவின் பிரதமர் என்றும் அவருக்கு கருப்புக்கொடி காட்டுவது தவறு என்றும் அவர் கருத்து கூறியுள்ளார். 
 
காவிரி மேலாண்மை அமைக்காததால் இந்திய பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டாமல் பாகிஸ்தான் பிரதமருக்கா கருப்பு கொடி காட்ட முடியும் என்று நெட்டிசன்கள் தினகரனுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ரிசல்ட்டுக்கு முன்பாக தமிழகம் வரும் பிரதமர் மோடி! குமரியில் தியானத்தில் ஆழ்கிறார்?

அரசு வேலை வாங்கித் தருகிறேன்.! தாசில்தார் என கூறி பல லட்சம் மோசடி.! கார் ஓட்டுநர் கைது..!!

காதலிக்கு இறுதிச்சடங்கு செய்ய காசில்லை.. பிணத்தை சாலையில் போட்டு சென்ற லிவ்-இன் காதலன்!

ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீன் மனு ஒத்திவைப்பு..! மே 30-ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிமன்றம்..!

சவுக்கு சங்கரை போல் பிரகாஷ்ராஜை கைது செய்ய வேண்டும்: நாராயணன் திருப்பதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments