Publish Date: Mon, 03 Dec 2018 (09:37 IST)
Updated Date: Mon, 03 Dec 2018 (09:41 IST)
டிக் டாக் செய்த போது வாலிபர் ஒருவர் தவறுதலாக கழுத்தை அறுத்துக் கொண்டார்.
சமூக வலைதளங்களில் அதிகமாக ஆதிக்கம் செலுத்தி வரும் டிக் டாக்கில் இளம் தலைமுறையினர் எந்நேரமும் மூழ்கியுள்ளனர். டான்ஸ் ஆடுவது, மிமிக்ரி என அவர்கள் செய்யும் அக்கப்போருக்கு அளவே இல்லை. சில அடாவடிகள் அரைகுறையாக அடை அணிந்து டிக்டாக்கில் அட்டூழியம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இளைஞர் ஒருவர், கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டு, பாடலுக்கு டான்ஸ் ஆடும்போது தெரியாமல் கழுத்தை அறுத்துக்கொண்டார். இதனால் அந்த இளைஞர் செய்வதறியாமல் ஷாக் ஆகி வீடியோவை துண்டித்துவிட்டார். பாவம் அவருக்கு என்ன ஆனதோ? விளம்பரம் தேட இவ்வாறு ஆபத்தான செயல்களில் இளைஞர்கள் செயல்படாமல் இருப்பது நல்லது.