Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போதைப்பொருள் விற்றவர்கள் எங்கே? ஸ்ரீகாந்த், கிருஷ்ணா அப்பாவிகள்: சீமான்

Mahendran
சனி, 28 ஜூன் 2025 (18:10 IST)
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், "போதைப் பொருளை விற்றவர்களை கண்டுபிடித்தீர்களா?" என்று கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மதுரையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தபோது சீமான், "நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா இருவருமே அப்பாவிகள். இவர்கள் இருவரைத் தவிர வேறு யாரும் சினிமா உலகில் போதைப்பொருள் பயன்படுத்தவே இல்லையா?" என்று வினவினார்.
 
தொடர்ந்து பேசிய அவர், "அதானி துறைமுகத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் சிக்கியதை அனைவரும் அறிவோம். அந்த போதைப்பொருட்களை பயன்படுத்திய இருவரை கைது செய்துவிட்டீர்கள். ஆனால், விற்றவர்களை யார் கைது செய்தார்கள்? போதைப் பொருள் எங்கிருந்து வருகிறதோ, அந்த வேரை வெட்ட வேண்டும். இந்த இரண்டு நடிகர்களை கைது செய்துவிட்டால், போதைப் பொருள் பழக்கம் நின்றுவிடுமா? இந்தியா முழுவதும் போதைப் பொருள் பயன்பாடு அதிகமாக உள்ளது," என்று தெரிவித்தார்.
 
மேலும், சினிமா வட்டாரத்தில் நடக்கும் போதைப் பொருள் புழக்கம் குறித்துப் பாடகி சுசித்ரா கூட பேசியிருக்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டது இந்த விவகாரத்தில் கூடுதல் பரபரப்பை கிளப்பியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்.. 55 வயது நபர் கைது..!

புரி ஜெகன்நாதர் ரத யாத்திரையில் அதானி குடும்பம்.. 40 லட்சம் பக்தர்களுக்கு உணவு, குளிர்பானம் வழங்கி உதவி..!

தபால் நிலையங்களிலும் யுபிஐ வசதி: ஆகஸ்ட் முதல் டிஜிட்டல் புரட்சி!

இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல்.. ஆனால் தாக்கியது ஈரான் அல்ல.. இன்னொரு நாடு. அதிர்ச்சி தகவல்..!

போன் செய்தால் போதும் வீட்டுக்கே வரும் பிஎஸ்என்எல் சிம்.. ஜியோ, ஏர்டெல்லுக்கு போட்டியா?

அடுத்த கட்டுரையில்
Show comments