Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேவைப்பட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம்: டிரம்ப் எச்சரிக்கை..!

Mahendran
சனி, 28 ஜூன் 2025 (18:05 IST)
இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ள நிலையில், "தேவைப்பட்டால் மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம்" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தது உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஈரான் நாடு வரம்புக்கு மீறி அதிகமாக யுரேனியத்தை செறிவூட்டுவதாக அமெரிக்க உளவுத்துறை தகவல் அளித்துள்ளதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். "அந்தத் தகவல் உறுதி செய்யப்பட்டால், ஈரான் மீது மீண்டும் கண்டிப்பாக தாக்குதல் நடத்தப்படும். மற்றொரு தாக்குதலுக்கு உத்தரவிட நான் சற்றும் தயங்க மாட்டேன்," என்று அவர் எச்சரித்துள்ளார். மேலும், தனது பேச்சில் ஈரான் தலைவர் கமெனியை அவர் கடுமையாக விமர்சித்ததும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
 
முன்னதாக, அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகவும், "இஸ்ரேல் அழிந்துவிடும் என்பதால் அமெரிக்கா தலையிட்டது" என்றும் ஈரான் மதகுரு காமேனி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 
அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளின் தலைவர்கள் மாறி மாறி கடுமையாகப் பேசி வருவது, மீண்டும் ஒரு பெரும் போருக்கு வழிவகுக்குமோ என்ற அச்சத்தை உலக நாடுகளிடையே ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பதற்றமாக இருக்கும் மத்திய கிழக்கு சூழலை இது மேலும் சிக்கலாக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்.. 55 வயது நபர் கைது..!

புரி ஜெகன்நாதர் ரத யாத்திரையில் அதானி குடும்பம்.. 40 லட்சம் பக்தர்களுக்கு உணவு, குளிர்பானம் வழங்கி உதவி..!

தபால் நிலையங்களிலும் யுபிஐ வசதி: ஆகஸ்ட் முதல் டிஜிட்டல் புரட்சி!

இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல்.. ஆனால் தாக்கியது ஈரான் அல்ல.. இன்னொரு நாடு. அதிர்ச்சி தகவல்..!

போன் செய்தால் போதும் வீட்டுக்கே வரும் பிஎஸ்என்எல் சிம்.. ஜியோ, ஏர்டெல்லுக்கு போட்டியா?

அடுத்த கட்டுரையில்
Show comments