Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தல தோனிக்காக என்ன வேணா பண்ணுவோம்! – தன் வீட்டை தல வீடாக மாற்றிய ரசிகர்!

Webdunia
செவ்வாய், 13 அக்டோபர் 2020 (11:44 IST)
அரபு அமீரக்த்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் தோனியின் சிஎஸ்கே அணி விளையாடி வரும் நிலையில் தோனி ரசிகர் ஒருவர் செய்துள்ள செயல் இணையத்தில் வைரலாகியுள்ளது.

அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடி வருகிறது. நீண்ட நாள் கழித்து தோனியின் ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்த நிலையில் சிஎஸ்கே தொடர் தோல்விகளை தழுவி வருவது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் சிஎஸ்கே ரசிகர்களே பலர் சிஎஸ்கேவையும், தோனியையும் விமர்சித்து பதிவுகள் போடுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பல தோனி ரசிகர்கள் தோற்றாலும் தோனியை விட்டுக்கொடுக்க மாட்டோம் என களத்தில் இறங்கியுள்ளனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகேயுள்ள அரங்கூரில் உள்ள கோபிகிருஷ்ணன் என்பவர் தீவிரமான தோனி ரசிகர். இந்த ஐபிஎல் போட்டியில் தோனி அணி வெற்றிபெற வேண்டும் என்று விரும்பிய அவர் தனது ஆதரவை வித்தியாசமான முறையில் காட்டியுள்ளார். தனது வீட்டையே சிஎஸ்கேவின் மஞ்சள் நிற பெயிண்டால் அலங்கரித்துள்ள அவர், அதில் தோனியின் படங்களையும் வரைந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments