Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலுக்கு பின்புதான் முதலமைச்சர் யார்? என்பதை முடிவு செய்வோம்: டிடிவி தினகரன்

Mahendran
சனி, 5 ஜூலை 2025 (12:57 IST)
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தேர்தலுக்கு பின்னர்தான் முதலமைச்சர் யார் என்பதை முடிவு செய்வோம் என்று கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி சமீபத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 'தேசிய ஜனநாயகக் கூட்டணி' என்ற பெயரில் உள்ள இந்த கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஆனால், அதே நேரத்தில், தேர்தலுக்கு பின்னர் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்றும், பா.ஜ.க. கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பகிரங்கமாக பேசி வருவது அனைவரும் அறிந்ததே. அதுமட்டுமின்றி, சமீபத்தில் அ.தி.மு.க.-வை சேர்ந்த ஒருவர்தான் முதலமைச்சர் என்று அமித்ஷா கூறியபோது, எடப்பாடி பழனிசாமியின் பெயரை அவர் குறிப்பிடாமல் இருந்தது சர்ச்சைக்கு உள்ளானது.
 
இந்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் டிடிவி தினகரன், "தேர்தலுக்குப் பின்னர்தான் முதலமைச்சர் யார் என்பதை முடிவு செய்வோம்," என்று தற்போது கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து.. லிப்டில் சிக்கிய நபர் பரிதாப பலி..!

மகாராஷ்டிர அரசியலில் வரலாறு காணாத திருப்பம்: ராஜ் - உத்தவ் தாக்கரே மீண்டும் கைகோர்க்கிறார்களா?

கச்சத்தீவு எங்களுக்கு சொந்தம்.. திருப்பி தர முடியாது: இலங்கை திட்டவட்ட அறிவிப்பு..!

உக்ரைன் மீது ரஷ்யாவின் வரலாறு காணாத ட்ரோன் தாக்குதல்: தலைநகர் கீவ் உட்பட பல நகரங்கள் இலக்கு!

பீகாரில் பாஜக பிரமுகர் சுட்டுக் கொலை: 3 ஆண்டுகளுக்கு முன் மகன் பலியான சோகம்: அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments