Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி! ஆனால் ஒரு நிபந்தனை..

Webdunia
வெள்ளி, 13 மே 2022 (07:42 IST)
சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி! ஆனால் ஒரு நிபந்தனை..
விருதுநகர் மாவட்டம் சதுரகிரியில் அமாவாசை மற்றும் பௌர்ணமி தினத்தில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவார்கள் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் வைகாசி பௌர்ணமி தினத்தை ஒட்டி சதுரகிரி கோவிலுக்கு இன்று முதல் நான்கு நாட்களுக்கு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது
 
ஆனால் அதே நேரத்தில் சதுரகிரி கோவிலுக்கு அனுமதிக்கப்பட்ட நாட்களில் மழைபெய்தால் கோவிலுக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்க மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
விருதுநகர் மாவட்டம் உள்பட பல்வேறு பகுதிகளில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் மழை பெய்யும் நேரத்தில் சதுரகிரி மலையேறுவது ஆபத்தானது  என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments