Publish Date: Thu, 14 Apr 2022 (16:07 IST)
Updated Date: Thu, 14 Apr 2022 (16:08 IST)
விருதுநகரில் இளம் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த ஒரு கும்பல் குறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது இந்த வழக்கில் குற்றவாளிகள் நால்வர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதாகவும், அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.,
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜூனைத் அகமது, ஹரிஹரன், மாடசாமி மற்றும் பிரவீன் ஆகிய 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதாகவும் இவர்களுக்கு ஜாமீன் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது