Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

“நாங்கள் வாக்களிக்கமாட்டோம்”.. தேர்தலை புறக்கணித்தனர் தேவேந்திரகுல வேளாளர்கள்

“நாங்கள் வாக்களிக்கமாட்டோம்”.. தேர்தலை புறக்கணித்தனர் தேவேந்திரகுல வேளாளர்கள்

Arun Prasath

, திங்கள், 21 அக்டோபர் 2019 (12:18 IST)
நாங்குநேரி தொகுதியில் தேவேந்திர குல சமுதாய மக்கள் இடைத்தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளில் இன்று சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற்றுவருவதை தொடர்ந்து, அப்பகுதி மக்கள் விறுவிறுப்பாக வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் நாங்குநேரி தொகுதியில் தேவேந்திர குல சமூகத்தை சேர்ந்தவர்கள் இடைத்தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்திருந்தனர்.

அதன் படி, நாங்குநேரி கீழப்பாட்டம் பகுதியில் உள்ள தேவேந்திர குல சமூகத்தினர் ஓட்டுபோடவில்லை என தெரியவருகிறது. மேலும் அரிய குளம், உன்னங்குளம், கல்லத்தி ஆகிய பகுதிகளில் அச்சமூக மக்கள் ஓட்டுபோடவில்லை எனவும் கூறப்படுகிறது.

ஆனால் களக்காடு, தருவை ஆகிய பகுதிகளில் பெருமளவு தேவேந்திர குல சமுதாயத்தினர் ஓட்டு போட்டதாகவும் தெரியவருகிறது. இதனால் நாங்குநேரி பகுதிகளில் உள்ள 15 வாக்குச்சாவடிகளிலும் மிகவும் குறைந்த அளவே வாக்குப்பதிவு நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

பட்டியல் இனத்திலுள்ள 7 உட்பிரிவுகளை ஒன்றினைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அறிவித்து அரசாணை வெளியிடவேண்டும் என வலியுறுத்தி நாங்குநேரி தேர்தலை புறக்கணிக்கப்போவதாக முன்னர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாமி சிலைகளை உடைத்த மர்ம நபர்கள்:மக்கள் போராட்டம்