Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்: உச்ச நீதிமன்றம் உத்தரவு..!

Siva
வெள்ளி, 12 ஜூலை 2024 (12:11 IST)
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கடந்த சில மாதங்களாக சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில் அமலாக்கத் துறை தன்னை கைது செய்தது தவறு என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு இன்று உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
 
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று வழங்கிய தீர்ப்பில் 90 நாட்களுக்கு மேல் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருக்கும் நிலையில் அவர் ஜாமினில் வெளியே வருவதற்கும் விசாரணை நடத்துவதற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை எனவும் ஜாமின் கிடைத்து வெளியே வந்தால் அவரிடம் விசாரணை நடத்த முடியாது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
 
மேலும் கெஜ்ரிவால் ஒரு மாநிலத்தின் முதல்வராக இருப்பதால் அவருக்கென்று சில உரிமைகள் உள்ளதாகவும், அவரை 90 நாட்களுக்கு மேல் சிறையில் இருப்பதால் ஜாமின் வழங்குவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீனவர்களுக்கு அபாண்டமான அபராதம் - வரலாற்று துரோகம்..! மத்திய மாநில அரசுகளுக்கு இபிஎஸ் கண்டனம்.!

டெண்டர் முறைகேடு புகார்.! எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் வழக்குப்பதிவு.!!

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்றிரவு மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

திருவள்ளுவர் பிறந்தநாள் - எந்த ஆதாரமும் இல்லை..! உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!!

பள்ளி வாகனம் பழுது ஏற்பட்டதால் பள்ளி மாணவர்களை இறங்கி வாகனத்தை தள்ளி விடச் சொன்ன தனியார் பள்ளியின் அவலம்!

அடுத்த கட்டுரையில்
Show comments