Publish Date: Sun, 02 May 2021 (09:16 IST)
Updated Date: Sun, 02 May 2021 (09:18 IST)
திருச்சி கிழக்கு தொகுதியில் வாக்கு எண்ணிக்கை பணிகள் தாமதமாக தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.
தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் நாள் நடந்த வாக்குப்பதிவு முடிவுகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் இப்போது வரை 71 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 40 க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் திருச்சி கிழக்கு தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் பணிகள் தாமதமாக தொடங்கியுள்ளன. வாக்கு எண்ணும் அதிகாரி தாமதமாக வந்ததால் இந்த குழப்பம் ஏற்பட்டதாக தெரிகிறது.