Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராஜா உள்ளே மாதவன் வெளியே: தீபாவின் உள்ளே வெளியே அரசியல்!

ராஜா உள்ளே மாதவன் வெளியே: தீபாவின் உள்ளே வெளியே அரசியல்!
, வெள்ளி, 2 பிப்ரவரி 2018 (13:13 IST)
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தனது கணவர் மாதவன் தான் ஆரம்பித்துள்ள ஜெ.தீபா பேரவையில் இல்லை எனவும், அவர் தனியாக கட்சி நடத்துகிறார் எனவும் கூறியுள்ளார்.
 
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அவரது அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வந்தார். தொடக்கத்தில் அவருக்கு இருந்த ஆதரவும், வரவேற்பும் நாட்கள் செல்ல செல்ல அவரது செயல்பாடுகளால் வெகுவாக குறைந்துவிட்டது.
 
தீபாவின் அரசியல் செயல்பாடுகளுக்கு பின்னால் அவரது நண்பரும் டிரைவருமான ராஜா இருப்பதாக கூறப்படுகிறது. கணவர் மாதவனுக்கும், தீபாவுக்கும் இதனால் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு அவர் தனியாக கட்சி ஆரம்பித்தார். பின்னர் சமாதானமாகி மீண்டும் தீபாவுடன் இணைந்தார்.
 
இந்நிலையில் திடீரென ஒருநாள் தீபா தனது பேரவையில் இருந்து ராஜாவை நீக்கம் செய்வதாக அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். ஆனால் தற்போது மீண்டும் தீபா ராஜாவை தனது பேரவையில் இணைத்துள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 
டிரைவர் ராஜா மீண்டும் தீபா பேரவையில் வந்துள்ள இந்த சூழ்நிலையில் தீபா, தனது கணவர் மாதவன் தீபா பேரவையில் இல்லை எனவும், அவர் தனியாக கட்சி நடத்துகிறார் எனவும் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குஷ்புவிற்கு எதிர்ப்பு; காங்கிரஸ் அலுவலகத்திற்கு பூட்டு : நெல்லையில் கோஷ்டி மோதல்