Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜெயலலிதா அம்மா, மோடி அப்பா என்றால் என்ன உறவுமுறை? தயாநிதி மாறனின் சர்ச்சை பேச்சு

Advertiesment
தயாநிதி மாறன்
, செவ்வாய், 30 மார்ச் 2021 (08:55 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஆ ராசா பேசியதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் இந்த பரபரப்பு முடியும் முன்னரே தயாநிதிமாறன் மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்துள்ளதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது
 
கிணத்துக்கடவு தொகுதி திமுக வேட்பாளர் குறித்து பிரபாகரன் என்பவரை ஆதரித்து தயாநிதி மாறன் எம்பி நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஜெயலலிதா எங்களுக்கு அம்மா என்றும், மோடி எங்களுக்கு அப்பா என்றும் கூறுகிறார். அப்படி என்றால் என்ன உறவுமுறை என்று நீங்களே பாருங்கள். இதை நாம் சொன்னால் தவறு என்பார்கள் என்று தயாநிதி மாறன் கூறியுள்ளார்
 
பொதுவாக பெண் தலைவர்களாக இருந்தால் அம்மா என்றும் ஆண் தலைவர்களாக இருந்தால் அப்பா என்றும் அழைக்கப்பட்டு வரும் நிலையில் இந்த அழைப்பை உறவு முறையுடன் சம்பந்தப்படுத்தி கொச்சைப்படுத்தியுள்ளார் தயாநிதிமாறன் என்று அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் 
 
ஆ ராசாவின் பிரச்சனை தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக முடிவுக்கு வரும் நிலையில் தற்போது தயாநிதி மாறனின் சர்ச்சை பேச்சால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆ ராசாவை அவ்வாறு பேச சொன்னதே ஸ்டாலின் தான்: எல் முருகன்