Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரதமர் மோடி வருகை; புதுச்சேரியில் 144 தடை உத்தரவு!

பிரதமர் மோடி வருகை; புதுச்சேரியில் 144 தடை உத்தரவு!
, திங்கள், 29 மார்ச் 2021 (17:26 IST)
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநில சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி நாளை புதுச்சேரி வருகிறார்.

தமிழகம், புதுச்சேரி, கேரளா மாநிலங்களில் ஒரே நாளில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாஜக – அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் நிலையில் பாஜக மேல் தலைவர்கள் பலர் தேர்தல் பிரச்சாரத்திற்காக அடிக்கடி தமிழகம், புதுச்சேரி பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில் நாளை புதுச்சேரியில் பாஜகவிற்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க பிரதமர் மோடி வருகை தர உள்ளார். பின்னர் அதே நாளில் அங்கிருந்து தமிழகம் வரும் அவர் தாராபுரத்தில் எல்.முருகனுக்கு ஆதரவாகவும் வாக்கு சேகரிக்க உள்ளார். இதற்காக புதுச்சேரிக்கு அவர் நாளை வர உள்ளதால் புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், வானத்தில் விமானங்கள் உள்ளிட்டவை பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுயேட்சை வேட்பாளர் அலுவலகத்தில் ரெய்டு!