Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மின் கட்டணம் செலுத்த கூடுதல் கால அவகாசம் - தமிழக அரசு!

Advertiesment
கொரோனா பரவல்
, செவ்வாய், 11 மே 2021 (09:50 IST)
தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த கூடுதல் கால அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

 
கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் வ்ரும் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த மே 31 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
ஆம், தாழ்வழுத்த மின் நுகர்வோர்கள் மின் கட்டணம், இதர நிலுவைத்தொகை செலுத்த மே 31 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் முடிந்தவரை இணையதளம் வாயிலாக மின் கட்டணத்தை செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்டாலின் தலைமையில் கலைவாணர் அரங்கத்தில் தமிழக சட்டப்பேரவை !