Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையில் இருந்து பெட்டி படுக்கையை கட்டிய 2 லட்சம் பேர் !

சென்னையில் இருந்து பெட்டி படுக்கையை கட்டிய 2 லட்சம் பேர் !
, திங்கள், 10 மே 2021 (14:03 IST)
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து சென்னையில் இருந்து 2,05,875 பேர் வெளியூர்களுக்குச் சென்றுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. 

 
இன்று அதிகாலை 4 மணி முதல் மே 24 ஆம் தேதி காலை 4 மணி வரை இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இதனையடுத்து சென்னையில் உள்ள பொதுமக்கள் தங்களது சொந்த ஊர் செல்லும் வகையில் சிறப்பு பேருந்துகள் கடந்த இரண்டு நாட்களாக விடப்பட்டன. 
 
இந்த பேருந்துகள் மூலம் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் சென்னையில் இருந்து 2,05,875 பேர் வெளியூர்களுக்குச் சென்றுள்ளனர். அதிகப்படியாக தென்மாவட்டங்கள் மற்றும் மதுரை மண்டலத்திற்கும், வடமாவட்டங்களுக்கும் அதிக அளவில் பயணிகள் சென்றதாக தமிழக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அண்ணா பல்கலைகழகம் மீது புகார்; விரைவில் நடவடிக்கை! – உயர்கல்வி அமைச்சர் பொன்முடி!