Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினமும் 30 பேருக்கு மெட்ராஸ் ஐ பாதிப்பு: மதுரை மாவட்ட நிர்வாகம் தகவல்!

Webdunia
வெள்ளி, 18 நவம்பர் 2022 (16:50 IST)
மதுரை மாவட்டத்தில் தினமும் 30 பேர் மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் தற்போது மெட்ராஸ் ஐ என்ற நோய் பரவி வருவதாகவும் இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருவதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் தினமும் 30 பேருக்கு மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதுவரை 210க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மதுரை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது 
 
ஆனால் அதே நேரத்தில் மெட்ராஸ் ஐ குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் தகுந்த சிகிச்சை எடுத்துக் கொண்டால் சில நாட்களில் குணமாகி விடலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் 
 
மேலும் மெட்ராஸ் ஐ குறித்த விழிப்புணர்வையும் பொதுமக்களுக்கு மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments