Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கவர்னர்கள் நியமனம் என்பது அரசியல் நியமனமாக மாறி உள்ளது: டி.ராஜா கருத்து

D raja
, ஞாயிறு, 12 பிப்ரவரி 2023 (17:40 IST)
கவர்னர்கள் நியமனம் என்பது அரசியல் நியமனமாக மாறி உள்ளது: டி.ராஜா கருத்து
கவர்னர்கள் நியமனம் என்பது அரசியல் நியமனமாக மாறிவிட்டது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி ராஜா தெரிவித்துள்ளார். 
 
இது குறித்து அவர் மேலும் கூறிய போது கவர்னர்கள் நியமனம் என்பது அரசியல் நியமனமாக மாறி உள்ளது என்றும் சிபி ராதாகிருஷ்ணன் ஜார்கண்ட் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது புதியது அல்ல என்றும் முன்னதாக எல். கணேசன் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் கவர்னர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார் 
 
தொடர்ச்சியாக பாஜகவினர் மட்டுமே கவர்னராக நியமிக்கப்பட்டு வருவது கவர்னர்கள் மத்திய அரசின் பிரதிநிதியாக செயல்பட்டு வருகின்றார் என்பதை உறுதி செய்துள்ளது என்று தெரிவித்தார். 
 
பாஜக ஆட்சியில் கார்ப்பரேட் நிறுவனங்கள் பெரும் வளர்ச்சியடைந்து வருகின்றன என்றும் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் பாஜக அரசை அகற்ற வேண்டும் என்றும் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாஜக அரசு வீழ்த்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருவண்ணாமலை ஏடிஎம்மில் கொள்ளையடித்த அரியானா கும்பல்? – போலீஸார் தீவிர விசாரணை!