வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ள புயல் சின்னம், 99.9% ஆந்திர கடற்கரையில் கரையை கடக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார். இது புயலாக மாறினால் 'மொந்தா' என பெயரிடப்படும்.
இந்த சின்னம் வட தமிழக கடற்கரையை ஒட்டி அருகில் வந்து ஆந்திராவுக்கு திரும்பினால் மட்டுமே, சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள மாவட்டங்கள் பலத்த மழையைப் பெறும். கடற்கரையை நெருங்காமல் திறந்த கடலிலேயே சென்றால் சென்னைக்கு லேசான மழையே கிடைக்கும். சென்னைக்கு மழை கிடைக்குமா என்பது குறித்து தெளிவான நிலை நாளை தெரியவரும்.
புயல் ஆந்திராவுக்கு செல்வதால், தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களுக்கு அதிக மழை வாய்ப்பு இல்லை. இருப்பினும், மேற்கு திசை காற்றின் காரணமாக இன்று கன்னியாகுமரி, நீலகிரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உண்டு. அக்டோபர் 27 மற்றும் 28 ஆகிய நாட்களைக் கவனமாக பார்க்க வேண்டும் என்றும், வட தமிழக மற்றும் ஆந்திர கடற்கரையோர மீனவர்கள் அக். 28 வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.