Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

TNPSC - குரூப் 2 முதல்நிலைத் தேர்வின் பாடத்திட்டம் மாற்றம்! மொழித்தாள் தேர்வு நீக்கம்!

TNPSC - குரூப் 2 முதல்நிலைத் தேர்வின் பாடத்திட்டம்  மாற்றம்! மொழித்தாள் தேர்வு நீக்கம்!
, வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (19:47 IST)
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் முதல்நிலைத் தேர்வின் பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளதாகவும், மொழித்தாள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
தமிழகத்தில் குருப் 2 முதல்நிலைத் தேர்வுகளில் பல லட்சக்கணக்கான இளைஞர்கள், இளைஞிகள் , மாணவ - மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொள்வார்கள்.
 
இந்நிலையில் தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் முதல்நிலைத் தேர்வின் பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளதாகவும், மொழித்தாள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
இதுகுறித்த அறிவிப்பில் கூறியுள்ளதாவது ;
 
முதல்நிலைத் தேர்வில் பொதுஅறிவு வினாக்கள் அதிகரிகப்பட்டுள்ளது. திறனறி புதிதாக அறிமுகமாகம் செய்யப்படவுள்ளது.
 
மொழிப்பாடப் பகுதி தனியாக இருந்து நீக்கப்பட்டு, அதற்கு  பதிலாக பிரதான தேர்வாக - தமிழக அரசியல் வரலாறு தமிழக பாரம்பரிய பகுதிகள் பொது அறிவு பகுதிலேயே சேர்க்கப்படும்.
 
நேர்காணல் அல்லாத பணியிடங்களுக்கான தேர்வு முறையில் பிரதான தேர்வு அறிமுகமாக உள்ளது.
 
இனிமேல், குரூப் 2 ஏ தேர்வில் ஒரு தேர்வுக்குப் பதிலாக இரு தேர்வு முறை அமல்படுத்தப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காதலனின் மர்ம உறுப்பை வெட்டி எறிந்த காதலி.. நெஞ்சை பதறவைத்த சம்பவம்