Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இருந்து பெட்டி படுக்கையை கட்டிய 2 லட்சம் பேர் !

Webdunia
திங்கள், 10 மே 2021 (14:03 IST)
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து சென்னையில் இருந்து 2,05,875 பேர் வெளியூர்களுக்குச் சென்றுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. 

 
இன்று அதிகாலை 4 மணி முதல் மே 24 ஆம் தேதி காலை 4 மணி வரை இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இதனையடுத்து சென்னையில் உள்ள பொதுமக்கள் தங்களது சொந்த ஊர் செல்லும் வகையில் சிறப்பு பேருந்துகள் கடந்த இரண்டு நாட்களாக விடப்பட்டன. 
 
இந்த பேருந்துகள் மூலம் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் சென்னையில் இருந்து 2,05,875 பேர் வெளியூர்களுக்குச் சென்றுள்ளனர். அதிகப்படியாக தென்மாவட்டங்கள் மற்றும் மதுரை மண்டலத்திற்கும், வடமாவட்டங்களுக்கும் அதிக அளவில் பயணிகள் சென்றதாக தமிழக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments