SIR வாக்காளர் பட்டியலில் 60% பேர் நீக்கப்படலாம்: பாலகிருஷ்ணன் எச்சரிக்கை

Mahendran
செவ்வாய், 4 நவம்பர் 2025 (10:28 IST)
தமிழகத்தில் தொடங்கியுள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியால்  60% வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கே. பாலகிருஷ்ணன் கவலை தெரிவித்துள்ளார்.
 
தஞ்சாவூரில் பேசிய அவர், ஒரு மாத காலத்துக்குள் 6.18 கோடி வாக்காளர்களை சரிபார்ப்பது சாத்தியமற்றது என்றும், மழைக்காலத்தில் இப்பணியை மேற்கொள்வது பயனற்றது என்றும் கூறினார். 
 
மேலும், 2002ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலை இணையத்தில் பதிவிறக்கம் செய்து படிவம் பூர்த்தி செய்யும் நடைமுறையால், கிராமப்புற மக்கள் மற்றும் கணினி வசதி இல்லாதவர்கள் பாதிக்கப்படுவார்கள். இதன் விளைவாக, ஏழைகள் மற்றும் சிறுபான்மையினர் உட்பட பலரின் பெயர்கள் நீக்கப்பட்டு, அவர்களின் குடியுரிமை கேள்விக்குறியாகும் என அவர் எச்சரித்தார்.
 
இந்த பணியை கட்டாயம் நிறுத்திவைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வழியாக செல்லும் வந்தே பாரத் உள்பட 4 புதிய ரயில்கள்: பிரதமர் தொடங்கி வைத்தார்...

2வது நாளாக மீண்டும் உயரும் தங்கம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

மாலியில் 5 இந்தியர்கள் கடத்தல்: அல்-கொய்தா, ஐஎஸ்ஐஎஸ் காரணமா?

மாணவர்கள் கேலி.. கண்டிக்காத ஆசிரியர்கள்.. 9 வயது மாணவி 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை..!

உடல் பருமனாக இருந்தால், நீரிழிவு நோய் இருந்தால் விசா கிடையாது: டிரம்ப் அதிரடி

அடுத்த கட்டுரையில்
Show comments