Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிஞ்சு குழந்தைய நாசமாக்கிட்டியே டா பாவி!! கோவை கொடூரனை பொளந்துகட்டிய மக்கள்...

Webdunia
வியாழன், 4 ஏப்ரல் 2019 (16:10 IST)
கோவையில் 7 வயது சிறுமியை நாசமாக்கி கொலை செய்த அயோக்கியனை பொதுமக்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர்.
கோவை துடியலூர் அடுத்த பன்னிமடை அருகே ஒன்றாம் வகுப்பு படித்து வந்த 7 வயது சிறுமி மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில குற்றவாளியை பிடிக்க போலீஸார் 10க்கும் மேற்பட்ட தனிப்படைகளை அமைத்து விசாரணை நடத்தினர்.
 
இறுதியில்  சந்தோஷ்குமார் என்ற அயோக்கியன் சிக்கினான். இந்த கேடுகெட்டவன் தான் அந்த பிஞ்சுக்குழந்தையை நாசமாக்கி கொலை செய்தது தெரியவந்தது. கடந்த 6 மாதமாக குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்துவந்ததாக கூறினான்.
 
இதையடுத்து சந்தோஷ்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். இந்நிலையில் அவனுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டான்.
பரிசோதனை முடிந்து போலீஸ் பாதுகாப்புடன் வெளியே வந்த அவனை அங்கிருந்த பொதுமக்கள் சரமாரியாக அடித்து துவைத்தனர். பிஞ்சு குழந்தைய நாசமாக்கிட்டியே டா பாவி என சொல்லியவாறே அடித்தனர்.  உடனடியாக அவனை போலீஸார் வேனில் ஏற்றி அழைத்து சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

அடுத்த கட்டுரையில்