Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமைச்சரே அரசியல் உள்நோக்கத்தோட இப்படி பண்ணலாமா? – எஸ்.பி.வேலுமணிக்கு 10 ரூபாய் அபராதம்!

அமைச்சரே அரசியல் உள்நோக்கத்தோட இப்படி பண்ணலாமா? – எஸ்.பி.வேலுமணிக்கு 10 ரூபாய் அபராதம்!
, வெள்ளி, 26 மார்ச் 2021 (14:49 IST)
அறப்போர் இயக்கத்திற்கு எதிராக எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்கு உள்நோக்கமுடையது என கூறிய நீதிமன்றம் அவருக்கு 10 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக அறப்போர் இயக்கம் வீடியோ வெளியிட தடைக்கோரி நீதிமன்றத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் டெண்டர் முறைகேடு, ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி தனக்கு எதிராக அறப்போர் இயக்கம் வீடியோ வெளியிடாமல் இருக்க தடை விதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் எந்த விதமான சான்றுகளும் இல்லாமல் தனிப்பட்ட அரசியல் உள்நோக்கத்தின் பேரில் இந்த வழக்கை பதிவு செய்து நீதிமன்ற நேரத்தை வீணடித்துள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு கண்டனம் தெரிவித்ததுடன் 10 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூயஸ் கால்வாயில் தரை தட்டிய கப்பலால் தினமும் 70 ஆயிரம் கோடி ரூபாய் சரக்கு தேக்கம்