Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பேருந்தில் இருந்து விழுந்த மருந்து பாட்டில்; உதவிய போலீஸ்! – லைவாக நடந்த சேஸிங்!

Advertiesment
Tamilnadu
, வெள்ளி, 26 மார்ச் 2021 (13:39 IST)
தென்காசி சாலையில் பேருந்தில் சென்ற மூதாட்டி மருந்து பாட்டிலை தவறவிட அதை போலீஸ் உதவியுடன் இளைஞர் ஒருவர் சேஸிங் செய்து சென்று கொடுத்த சம்பவம் வைரலாகியுள்ளது.

தமிழகத்தின் தென்காசி சாலையில் சென்ற பேருந்தில் பயணித்த மூதாட்டி ஒருவர் தன்னுடைய மருந்து பாட்டிலை தவறவிட்டுள்ளார். சாலையில் விழுந்த மருந்து பாட்டிலை அந்த பக்கம் பணியில் இருந்த காவலர் ஒருவர் எடுத்துள்ளார். பின்னர் அந்த பக்கமாக பைக்கில் பயணித்த இளைஞர் ஒருவரை நிறுத்தி விவரத்தை கூறி அந்த மருந்து பாட்டிலை மூதாட்டியிடம் சேர்க்க சொல்லியுள்ளார்.

காவலரின் கோரிக்கையை ஏற்ற இளைஞர் முன்னால் சென்ற பேருந்தை சேஸ் செய்து சென்று நிறுத்தி மருந்தை மூதாட்டியிடம் சேர்ப்பித்துள்ளார். இந்த சேஸிங்கை அவர் வீடியோவாகவும் பதிவு செய்து யூட்யூப் பக்கம் ஒன்றில் பதிவிட்டுள்ள நிலையில் அது வைரலாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகாராஷ்டிராவில் கொரோனாவில் இருந்து மீண்ட மூதாட்டியை சேர்க்க மறுத்த குடும்பம்; தெருவில் விடச்சொன்ன மகன்