Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மார்ச்க்கு பிறகு நகர்புற உள்ளாட்சி தேர்தல்?? – மாநில தேர்தல் ஆணையம் தகவல்!

Webdunia
திங்கள், 27 செப்டம்பர் 2021 (12:08 IST)
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு தொடங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பஞ்சாயத்துகளுக்கான உள்ளாட்சி தேர்தலும் நடந்தது. ஆனால் நகர்புற உள்ளாட்சி தேர்தல் மட்டும் இதுவரை நடைபெறாமல் உள்ள நிலையில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து விளக்கமளிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதன் அடிப்படையில் விளக்கமளித்துள்ள தமிழக மாநில தேர்தல் ஆணையம் ” நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவடைந்துவிடும். தேர்தலை நடத்துவதற்கு கட்டாயம் கால அவகாசம் வழங்க வேண்டும்” என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடியுரிமைக்கான சான்றாக ஆதார் ஏற்கப்படாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

ரஷ்யாவின் ஒரே ஒரு ஹீலியம் ஆலையின் மீது உக்ரைன் தாக்குதல்! தீப்பற்றி எரிவதாக தகவல்..!

பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு தேதி நீட்டிப்பு.. முழு விவரங்கள்..!

ஒரே பக்கத்தில் 6 இடத்தில் ஒரு பெண்ணின் பெயர்.. வாக்காளர் பட்டியலில் பெரும் குளறுபடி..!

மீண்டும் மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டம்.. விலைப்பட்டியல் அரசிடம் சமர்ப்பிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments