Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் இன்று 938 பேருக்கு கொரோனா உறுதி : 6 பேர் உயிரிழப்பு

Webdunia
சனி, 30 மே 2020 (18:31 IST)

தமிழ்நாட்டில் இன்று மேலும் 938 பேருக்கு கொரோனா உறுதி  செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21,184ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில்  நாளையுடன் 4வது கட்ட பொது  ஊரடங்கு முடிவடையும் நிலையில் சில  தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிறது. ஏற்கனெவே உள்ளதுறை அமைச்சர் அமித் ஷா மாநில முதல்வர்களுடன் கொரோனா நிலவரம் குறித்து கேட்டறிந்த நிலையில், இதுகுறித்து மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கு என தெரிகிறது.

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை கூறியுள்ளதாவது : இன்று தமிழகத்தில் மேலும் 938 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,184 ஆக அதிகரித்துள்ளது. இன்று 6 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தம்  பலியானோர் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 618 பேருக்கு கொரோனா தொற்று  உறுதியாகியுள்ளது. சென்னையில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 13,980 பேராக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் இன்று 687 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ள நிலையில், மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 12 ஆயிரமாக அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ராஜீவ் காந்தியின் 33 -வது ஜோதி வாகனப் பயணம் தொடங்கிய இடத்திலே நிறுத்தம்-மாநில தலைவரின் கடிதம் ஏற்படுத்திய தடை!

10 ரூபாய் காயின்களை வாங்கலைனா கடும் நடவடிக்கை! – கடைகளுக்கு எச்சரிக்கை!

நீதிமன்ற அனுமதியின்றி யாரையும் கைது செய்யக்கூடாது..! ED-க்கு உச்சநீதிமன்றம் செக்..!!

இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது. இந்திய கடற்படையினர் அதிரடி..!

ரூ.22 கோடி கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்.. சென்னையில் 5 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments